சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுக்காக
காத்திருக்காமல் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்
கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் கூறினார்.
இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை பல்கலைக்கழகமே இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும். இவர்களின் மதிப்பெண் பட்டியலும் சேர்த்து பரிசீலித்த பிறகே மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ.க்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகள் வெளிவராததாலும், மதிப்பெண்கள் விவரம் தெரியாததாலும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்குமா?
தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் ஜூலை 30-ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கான கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுப் பணிகளையும் முடித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
அதன்படி இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 15 நாள்களுக்கு முன்னதாகவே அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வழங்கி வருகிறது. மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ரேண்டம் மதிப்பெண்கள் ஜூன் 5 -ஆம் தேதியும், மாணவர்களின் ரேங்க் பட்டியல் ஜூன் 12-ஆம் தேதியும் வெளியிடப்படும்.
மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி கல்லூரிகள் செயல்படத் தொடங்கும்.
இந்த காலமுறையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. சிபிஎஸ்இ பிரிவு மாணவர்களும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழகமே பதிவிறக்கம் செய்யும்: ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகிய பிறகு அண்ணா பல்கலைக்கழகமே, மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு பதிவு எண்ணைக் கொண்டு இணையத்தில் இருந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளும்.
மாணவர்களும் தங்கள் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்து சி.டி.யில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பலாம்.
சிபிஎஸ்இ பாடத்திட்ட பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியலையும் சேர்த்து பரிசீலித்த பிறகே மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார் அமைச்சர் பழனியப்பன்.
தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை பல்கலைக்கழகமே இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும். இவர்களின் மதிப்பெண் பட்டியலும் சேர்த்து பரிசீலித்த பிறகே மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.
இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ.க்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகள் வெளிவராததாலும், மதிப்பெண்கள் விவரம் தெரியாததாலும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு தேவையான நடவடிக்கை எடுக்குமா?
தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் ஜூலை 30-ஆம் தேதிக்குள் மாணவர்களுக்கான கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுப் பணிகளையும் முடித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
அதன்படி இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக 15 நாள்களுக்கு முன்னதாகவே அண்ணா பல்கலைக்கழகம் விண்ணப்பங்களை வழங்கி வருகிறது. மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ரேண்டம் மதிப்பெண்கள் ஜூன் 5 -ஆம் தேதியும், மாணவர்களின் ரேங்க் பட்டியல் ஜூன் 12-ஆம் தேதியும் வெளியிடப்படும்.
மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 21-ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி கல்லூரிகள் செயல்படத் தொடங்கும்.
இந்த காலமுறையில் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. சிபிஎஸ்இ பிரிவு மாணவர்களும் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பல்கலைக்கழகமே பதிவிறக்கம் செய்யும்: ஜாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகிய பிறகு அண்ணா பல்கலைக்கழகமே, மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு பதிவு எண்ணைக் கொண்டு இணையத்தில் இருந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளும்.
மாணவர்களும் தங்கள் மதிப்பெண்களைப் பதிவிறக்கம் செய்து சி.டி.யில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பலாம்.
சிபிஎஸ்இ பாடத்திட்ட பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியலையும் சேர்த்து பரிசீலித்த பிறகே மாணவர்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படும். எனவே, சிபிஎஸ்இ மாணவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார் அமைச்சர் பழனியப்பன்.
தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment