தஞ்சாவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன்
கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க
வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக
கட்சியைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
pack
பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு
அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.
பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி
தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை
எச்சரித்துள்ளது.
ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிப்பு
7-வது சம்பள கமிஷனை இன்று பிரதமர் அறிவித்தார். இந்த வகையில், நாட்டில்,
முதல்முறையாக ராணுவத்திற்கு என தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: பங்கேற்க அழைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்., 30 ல் நடக்கிறது.
இலவச பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஆறு யூனியன்களை சேர்ந்த
பெண்களுக்கு, நேரு இளையோர் மையம் சார்பில் இலவச தையல் பயிற்சி,
கம்ப்யூட்டர் அடிப்படை பயிற்சி மற்றும் அழகு கலை பயிற்சி வழங்கவுள்ளதால்
தகுதியானவர்கள் வரும் அக்டோபர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில்
நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி
விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாக
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா
தெரிவித்தார்.
குழந்தை பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையில்
குழந்தைப் பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையேயான ஒரு
பருவம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ட்வீன் என்று அழைப்பர். 11 வயது முதல் 13
வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இதற்குள் அடக்கம்.
இளைஞர் படையின் 10,500 பணியிடத்திற்கு 1.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் இளைஞர் படைக்கு 10,500
பணியிடத்திற்கு மாநிலம் முழுவதும் நேற்றுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம்
விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்கியது
பிளஸ் 2 தனித் தேர்வுகள், மாநிலம் முழுவதும், 114 மையங்களில் துவங்கின.
நேற்று, மொழி முதல்தாள் தேர்வு நடந்தது. தொடர்ந்து, வரும், 2ம் தேதி வரை
நடக்கும் தேர்வை, 42 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு
தனித்தேர்வு, மாநிலம் முழுவதும், 124 மையங்களில் துவங்கின.
குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்
சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப,
டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக
ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, அக்., 4ம்
தேதியுடன் முடியும் நிலையில், இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுத்துறை தேர்வுகள் அறிவிப்பு
டிசம்பர் மாதம் நடக்க உள்ள, அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை,
டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அரசு பணிகளில் உள்ளவர்களும், அரசு
பணிகளை எதிர்நோக்கி காத்திருப்பவர்களும், துறை தேர்வுகளை எழுதலாம்.
பூமியைக் காக்கும் ஓசோன் படலத்தை காப்போம்
சூரிய ஒளிப்பிழம்பின் ஒரு பகுதியான புற ஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து
நிறுத்தி, புவியைக் காத்து வரும் வளையமே ஓசோன் படலம். கடல்
மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள "அடுக்கு வாயு
மண்டலத்தில்" தான் ஓசோன் உள்ளது.
ஏழை மாணவ, மாணவியர் கல்வியறிவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர்
"தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பத்தை
சேர்ந்தச் மாணவ, மாணவியர் தங்குதடையின்றி கல்வியறிவை பெறும் வகையில்,
முதல்வர் ஜெயலலிதா, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை, மாணவ,
மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அமைச்சர் வைத்திலிங்கம்
பேசினார்.
படித்து பட்டம் பெறுவது 55 லட்சம் பேர் வடிகட்டி பார்த்தால் தேறுவது 15 சதவீதம்
"ஆண்டுக்கு 55 லட்சம் மாணவர்கள் இங்கு படித்து பட்டம்
பெறுகின்றனர். இவர்களில் 12 முதல் 15 சதவீதம் பேர் மட்டுமே, வேலை
வாய்ப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்" என, இந்திய தொழில்கள் கூட்டமைப்பின்
கோவை மண்டல தலைவர் சுந்தரராமன் பேசினார்.
20 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் பட்டியல்: தேர்வுத்துறை சாதனை
மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக,
நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில்,
புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.
ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி
ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும், குறைதீர்க்கும் முகாம் நடத்த, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழாசிரியர் நியமன தேர்வு வினாத்தாளில் பிழை: முடிவுகள் வெளியிட தடை
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், முதுகலை பட்டதாரி ஆசிரியர்
நியமனத்திற்கு நடந்த தேர்வில், அச்சுப்பிழை உள்ள கேள்விகளை பார்த்த, மதுரை
ஐகோர்ட் கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து, "தமிழை செம்மொழியாக அறிவித்த
நிலையில், அச்சுப்பிழையுடன் வினாத்தாள் தயாரித்திருப்பதை, ஏற்க முடியாது;
தேர்வு முடிவு வெளியிட, தடை விதிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு
பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.
சான்றிதழ் இன்றி 4,000 மாணவர்கள் பாதிப்பு: முதல்வர் உத்தரவுக்காக காத்திருப்பு
ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மக்களுக்கு,
சான்றிதழ் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலைவாழ்
மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
என்.சி.சி., சான்றிதழுக்கு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு
போலீஸ் பணி மறுக்கப்பட்டவருக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால், வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாட்டின் அதிக கல்வியறிவு மாநிலம்: கேரளாவை வீழ்த்தியது திரிபுரா
"நாட்டில், அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ள மாநிலம் என்ற பெருமையைப்
பெற்றிருந்த கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி, திரிபுரா மாநிலம், முதல் இடத்தை
அடைந்து உள்ளது" என அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதல்வர், மாணிக்
சர்க்கார் கூறியுள்ளார்.
1,064 பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு அறிவிப்பு
"சார்பதிவாளர், வணிகவரித்துறை உதவி அதிகாரி உள்ளிட்ட பதவிகளில்,
காலியாகவுள்ள, 1,064 பணியிடங்களை நிரப்ப, வரும் டிசம்பர் 1ம் தேதி முதல்
நிலைத் தேர்வு நடைபெறும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
உயர்கல்வி ஆசிரியர்களுக்கு தேவைப்படும் தகுதிகள்
உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பை இந்தியா பெற்றுள்ளது என்றால்,
பலருக்கும் அந்த தகவல் ஆச்சர்யமாகவே இருக்கும். ஆம், அதுதான் உண்மை. சுமார்
45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் டிப்ளமோ கல்வி நிறுவனங்கள்
உள்ளன. இவற்றில் மொத்தம் 3 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இணையதளத்தை தவறான முறையில் பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் 25 லட்சம் பேர்
"இன்டர்நெட்டில் ஆபாச படம் பார்க்கும் இளைய தலைமுறையினர் 25
லட்சம் பேர் என, ஆய்வுகள் கூறுகின்றது," என ஓய்வு பெற்ற காவல் துறை
எஸ்.பி. கலியமூர்த்தி பேசினார்.
திருக்குறள் ஓர் அறிவியல் நூல்: உங்களோடு ஒர் ஆய்வு - 7
நண்பரோடு பேசுகையில் அவர் கூறியது, திருக்குறள் அனைவருக்கும் எக்காலத்திலும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றார்.
உண்மை தானே. பொருந்தும் வகையில் எனில் அது வாழ்வின் அடிப்படை கூறுகளை உண்மை நிலை (State of Nature) மாறாத வண்ணம் உணர்ந்து எழுதப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு சென்றால் கண்டுபிடிக்கும் கருவி அறிமுகம்
ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மொபைல் போனை கண்டுபிடிக்கும் நவீன கருவியை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்கள் சதவீதம் உயர்வு: அமைச்சர்
"தமிழகத்தில், உயர் கல்வி பயில்பவர்கள், 19 சதவீதம் உயர்ந்துள்ளதோடு,
கல்வி திட்டத்தில், முதன்மை மாநிலமாக திகழ்கிறது" என பட்டமளிப்பு விழாவில்,
உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
வேலை தேடுவதை எளிதாக்க நான்கு வழிகள்
இன்று ஒவ்வொரு ஆண்டு முடியும் போது பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள்
தங்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு சந்தைக்கு வருகிறார்கள்.
ஆண்டு தோறும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது, புதிய வேலை
வாய்ப்புகளும் உருவாகிறது.
மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி: குழந்தைத் திருமணத்தை தடுக்க திட்டம்
பள்ளியில் இருந்து இடையில் நிற்பது மற்றும் குழந்தை
திருமணத்தை தடுக்க மாணவ, மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் பயிற்சி அளிக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகள், மாநில அளவில்,
பொதுத்தேர்வாக, செப்., 10ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடக்கின்றன. பிளஸ்
2 தேர்வுகள், 10 நாட்களும், 10ம் வகுப்பு தேர்வுகள், ஏழு நாட்களும்
நடக்கின்றன. இத்தேர்வை, 19 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.
516 காலி பணியிடங்கள்: செப்., 4, 5ல் நான்காம் கட்ட கலந்தாய்வு
குரூப்-4, பணியிடங்களுக்கான, நான்காம் கட்ட கலந்தாய்வு, செப்., 4, 5 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கிறது.
"1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்"
"தமிழகத்தில் 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே
உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" என ராமநாதபுரத்தில்,
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில்
தெரிவித்தார்.
டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்
டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.
"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம்
வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.
குரூப்-4 தேர்வில் கணிதம் கடினம்: தேர்வு எழுதியவர்கள் புலம்பல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் கணிதம் பகுதி கடினமாக இருந்ததாக,
தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். எனினும் பொது அறிவு பகுதியில்
இடம்பெற்ற பல கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு: ஆசிரியர்களுக்கு வழிகாட்டு பயிற்சி
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு
நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப்
பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிப்பால், பருவ கால முறையில் அதிகளவில் மாற்றம்
ஏற்படுகிறது.
வழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு
வழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது.
தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். கடந்த, 2010ம்
ஆண்டுக்கு பின், சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள்,
கண்டிப்பாக தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என, அகில இந்திய
பார் கவுன்சில், 2009ல் உத்தரவிட்டது.
எம்.எட்., தேர்வு முடிவுகள் 26ம் தேதி வெளியீடு
எம்.எட்., தேர்வு முடிவு, நாளை (26ம் தேதி), ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
2030ம் ஆண்டுக்குள் 50% பேருக்கு மனநலம் பாதிக்கும்: உலக சுகாதார அமைப்பு
"வரும் 2030 ம் ஆண்டுக்குள், உலகில் 50 சதவீதம் பேருக்கு மனநலம்
பாதிக்கும் வாய்ப்பு உள்ளது" என உலக சுகாதார மைய ஆய்வில், அதிர்ச்சி தகவல்
வெளியாகி உள்ளது. இதனால், பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடம், மனநலம்
குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
"தனியார் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்கு செல்ல வேண்டியதில்லை"
கோவை மாநகராட்சி பள்ளி ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு, "இங்கிலீஷ் ஹெல்பர்" டிஜிட்டல் பாடத்திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.
பெற்றோர்களே வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள்
இன்றைய நவீன உலகில், கல்வி கட்டாயமாகிவிட்டது. அதுவும், முன்பெல்லாம்
ஏதாவது ஒரு வேலையில் சேர வேண்டுமெனில், ஓரளவு எழுத்தறிவு பெற்றிருந்தால்
போதும். இந்நிலை இன்று மாறிவிட்டது. மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சி
மற்றும் மக்கள் தொகை உயர்வு காரணமாக, வேலைவாய்ப்பு என்பது சுமையாக மாறி
உள்ளது.
காற்றில் பறக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம்: 3055க்கு 762 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை
தமிழகத்தில் செயல்படும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கட்டாய
கல்வி உரிமைச்சட்டம் (ஆர்.டி.இ.,) சுத்தமாக மதிக்கப்படவில்லை என்பது, தகவல்
உரிமைச் சட்டத்தால் அம்பலமாகியுள்ளது.
குரூப்-4: முறைகேடு செய்தால் தேர்வெழுத தொடர்ந்து தடை
தமிழகம் முழுவதும் 14 லட்சம் பேர் பங்கேற்கும், குரூப்-4 தேர்வு நாளை
நடக்கிறது. இதையொட்டி, டி.என்.பி.எஸ்.சி., பல்வேறு, கிடுக்கிப்பிடி
நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
40 ஆயிரம் பள்ளிகளில் சதுரங்கப் போட்டி
மாநிலம் முழுவதும், 40 ஆயிரம் பள்ளிகளில், நேற்று, சதுரங்கப் போட்டி
துவங்கியது. செப்டம்பர் இறுதியில், மாநில அளவில், இறுதிப் போட்டிகள்
நடக்கின்றன.
திசை மாறும் மாணவர் சமுதாயம்
வள்ளியூரில் நடந்து சென்ற பெண்ணிடம் பள்ளி மாணவர்கள் செயினை
பறிக்க முயன்ற சம்பவத்தில் பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டதின்
எதிரொலியாக அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட சம்பவம் பெறும்
பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து இரண்டு மாணவர்களிடம் போலீசார்
தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புல்லையும் பணமாக்கும் விவசாயப் பொருளியல்
“விவசாயப் பொருளியல்” (அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ்) எனப்படுவது
விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தை சேவை நோக்கோடு மட்டுமல்லாமல் வணிக
கண்ணோட்டத்துடனும், பொருளை ஈட்டும் வகையில் நில நிர்வாகம், வேலையாட்கள்,
முதலீடு மற்றும் சிறு பண பரிமாற்றங்களின் அடிப்படை போன்றவற்றால் அவர்கள்
வாழ்க்கைத் தரத்தை மேம்பட வைப்பதற்கு உதவுவதற்கான படிப்பே விவசாயப்
பொருளியலாகும்.
நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுங்கள்
இன்றைய இளம் தலைமுறையினரிடம் நல்ல பழக்கவழக்கங்கள் குறைந்து வருவதாக
பெரியவர்கள் பலரும் கவலை கொள்கின்றனர். தினந்தோறும் நடக்கும் பல்வேறு
சம்பவங்கள் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.
வெளிநாட்டு கல்விக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?
உலகமயமாதல் யுகத்தில் வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் சென்று படிப்பது
சாதாரணமாகிவிட்ட நிலையில், எந்த நாட்டில் படிக்க, எப்போது விண்ணப்ப மற்றும்
விசா செயல்பாட்டை தொடங்க வேண்டும் என்பதை அறிதல் முக்கியம்.
பள்ளி பாடப்புத்தகம் அச்சிடுவதில் தமிழக அச்சகங்களுக்கு முன்னுரிமை
"பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணிகளை அளிப்பதில், தமிழக
அச்சகங்களுக்கு, முன்னுரிமை வழங்கப்படும்" என தமிழ்நாடு பாடநூல் கழக
நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
Subscribe to:
Posts (Atom)