"எல்லாவிதமான இலக்கிய படிப்புகளுக்கும் தொல்லியல், கல்வெட்டு அறிவு தேவை" என, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருமலை கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த, தமிழக தொல்லியல் கழக கருத்தரங்கில்,
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் திருமலை பேசியதாவது: "தமிழ்
பல்கலைக்கழகத்தில் உள்ள தொல்லியல், கல்வெட்டு துறை, நீர் அகழ்வாய்வு
துறைகள் மூலம் சில புதிய கல்வெட்டுகள், வரலாற்று சிற்பங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கல்வெட்டு, தொல்லியல் அறிவு எல்லாவிதமான இலக்கிய
படிப்புகளுக்கும் தேவை. இலக்கியம் மட்டும் படித்து பொருள் கூறுவது சிறந்த
முறையல்ல. இலக்கியத்தில் பிற துறைக்கான வரலாறு, தொல்லியல், பொறியியல்,
தத்துவவியல், மானுடவியல் துறைகளின் பின்னடைவையும் நாம் ஆராய வேண்டும்.
இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்கள், இந்த துறைகளைப் பற்றி அவசியம் கற்றுக்
கொள்ள வேண்டும்.
மாநில திட்டக் கமிஷன் 12வது ஐந்தாண்டு திட்டத்தில், தமிழ்ப்
பல்கலைக் கழகத்தில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு துறையை உயர் ஆய்வு
மையமாக மாற்ற, 6 கோடியே 94 லட்சம் ரூபாயை இந்தாண்டு ஒதுக்கீடு செய்துள்ளது.
கடலுக்குச் சென்று ஆய்வு செய்யும் கடல்சார் தொல்லியல்
ஆய்வுக்கும் 98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளனர். தமிழ்ப் பல்கலைக்
கழகத்தில் கல்வெட்டியல், நாணயவியல், கோவில் கட்டடக் கலை படிப்புகள்
இந்தாண்டு தொலைதூரக் கல்வி மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
தமிழ்ப் பல்கலைக் கழகம் மூலம் 16 ஆயிரம் பக்கங்கள் கொண்ட
அரிய நூல்கள் வெளியிடப்பட உள்ளன. முன் வெளியீட்டு திட்டத்தில் அரிய நூல்களை
முதன் முறையாக, அரசு துறைகளில் தமிழ் பல்கலைக் கழகம் தான் வெளியிடுகிறது.
இவ்வாறு துணைவேந்தர் திருமலை பேசினார்.
No comments:
Post a Comment