கும்மிடிப்பூண்டியை அடுத்த சாணாபுத்தூர் பகுதியில்
அரசு தொடக்கப்பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு நிதி உதவிப்
பெறும் பள்ளி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
சாணாபுத்தூரில் அரசு நிதி உதவிப்பெறும் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1865-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இப்பள்ளியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதி மாணவர்கள், நடுநிலைக்கல்விக்காக 8 கிலோமீட்டர் தொலைவு வரை செல்ல வேண்டியுள்ளது.
எனவே தங்கள் பகுதியில் அரசுப் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரிடமும் இது தொடர்பான மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், அரசுப் பள்ளியை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் இப்பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். அவர்களின் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் நடுநிலைக் கல்விக்காக தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களும் இப்போராட்டத்தில் பங்கேறனர்.
சாணாபுத்தூரில் அரசு நிதி உதவிப்பெறும் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி கடந்த 1865-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இப்பள்ளியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதி மாணவர்கள், நடுநிலைக்கல்விக்காக 8 கிலோமீட்டர் தொலைவு வரை செல்ல வேண்டியுள்ளது.
எனவே தங்கள் பகுதியில் அரசுப் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோரிடமும் இது தொடர்பான மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டிக்கும் வகையிலும், அரசுப் பள்ளியை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் இப்பள்ளி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். அவர்களின் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் நடுநிலைக் கல்விக்காக தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு செல்லும் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்களும் இப்போராட்டத்தில் பங்கேறனர்.
No comments:
Post a Comment