அரசியல்வாதிகள் எப்படி இருந்தால், ஓட்டளிப்போம் என்பதற்கு, இளைஞர்கள்
கொடுத்த புது உதாரணம் தான் டில்லி தேர்தல். கல்லூரி மாணவர்களின் புத்தாண்டு
கனவு என்ன? தேசம், கல்வி, அரசியல் பற்றி அவர்களின் புத்தாண்டு
எதிர்பார்ப்பு என்ன?
pack
பொழுது உபயோகமாகப் போகிறதா?
பள்ளி, கல்லூரி முடித்து வந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும்
பொழுதுகளை கழிப்பது கடினமான செயலாக பதின் பருவத்தினரிடையே காணப்படுகிறது.
ஒரே செயல்பாட்டை நாள் முழுவதுக்குமானதாக தொடர இளம் தலைமுறையால்
முடிவதில்லை. புதியவற்றை அவர்கள் மனம் தேட ஆரம்பித்துவிடுகிறது. இதன்
காரணமாக பொழுதை போக்குவதில் கூட குழப்பங்கள் ஏற்படுகிறது.
பள்ளி வாகனங்கள் சான்று ரத்து செய்து நடவடிக்கை
விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார்.
ஐ.ஏ.எஸ்., பதவி உயர்வுக்கு எழுத்து தேர்வு கட்டாயம்
மாநில அரசின், குரூப்-1, குரூப்-2 அந்தஸ்து அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., -
ஐ.பி.எஸ்., அந்தஸ்தை பெற எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கட்டாயமாகிறது.
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு: விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தல்
அகில இந்திய அளவில் நடக்கும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு
குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாணவர் பெற்றோர்
நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இணையதள பாதுகாப்பு கொள்கை விரைவில் வெளியீடு
இணையதளம் மூலம் அரசு துறைகள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது, அந்தத்
தகவல்கள், பிறரால், "ஹாக்" செய்யப்படுகிறது. அதை தவிர்க்க, விரைவில், "இ -
மெயில்" பாதுகாப்பு கொள்கை பின்பற்றப்பட உள்ளது.
குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க வலியுறுத்தல்
"குழந்தைகள் பாதிக்கப்படும் இடமெல்லாம், நலக்குழும உறுப்பினர்கள்
உடனடியாக செல்ல முடியாது. எனவே கல்லூரி மாணவர்களை கொண்ட தன்னார்வ குழுக்களை
உருவாக்க வேண்டும்" என மதுரையில் நடந்த மாநில குழந்தைகள் நலக் குழுமத்
தலைவர்களுக்கான கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இளைஞர் காவல் படை: டிச.,30ல் உடற்கூறு தேர்வு
தமிழ்நாடு இளைஞர் காவல் படைக்கான உடற்கூறு தேர்வு வரும் 30ம் தேதி துவங்குகிறது.
பள்ளிகளில் "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும்,
"கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட
நடவடிக்கை துவங்கி உள்ளது.
உலகளாவிய விவாதப் போட்டி - சென்னையில் நடக்கிறது
உலக பல்கலைகளின் விவாத சாம்பியன்ஷிப் போட்டியை, டிசம்பர் 28ம் தேதி
முதல், அடுத்தாண்டு ஜனவரி 3ம் தேதி வரை, சென்னை தண்டலத்திலுள்ள ராஜலட்சுமி
கல்வி நிறுவனம் நடத்தவுள்ளது.
துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சேலம் கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் 20 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் கூடுதலாக 650 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கல்வி உபகரணங்களை தயாரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
கல்வி உபகரணங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் தயாரிக்க வேண்டும் என தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வை வெல்ல நினைப்பவர்களுக்கு யு.பி.எஸ்.சி தலைவர் அறிவுரை
சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது
கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக
அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகளில் மின் சிக்கன வார விழா
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மன கழகத்தின், நாமக்கல் அடுத்த
தத்தாத்திரிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில், ஏளூர் அரசு மேல்நிலைப்
பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார விழா
நடந்தது.
100% தேர்ச்சி தேவை: மாவட்ட கலெக்டர் அறிவுரை
"நடப்பு கல்வி ஆண்டில், பொதுத்தேர்வு எழுதவுள்ள, அரசு பள்ளி மாணவர்கள்,
100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்" என ஆசிரியர்களுக்கு, கலெக்டர்
தட்சிணாமூர்த்தி அறிவுரை வழங்கினார்.
ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு
பொது நூலகத்துறை 30 கோடி ரூபாய்க்கு, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை
வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்" என பள்ளி
கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் (கூடுதல் பொறுப்பு நூலகத் துறை)
அறிவித்துள்ளார்.
2014ம் ஆண்டின் உலகளாவிய நெறிமுறை மாநாடு
Global Ethics Forum என்ற மாநாட்டை, ஐ.ஐ.எம்., பெங்களூர் வரும் ஜனவரி மாதம் 3 - 5 தேதிகளில் நடத்துகிறது.
இளைஞர் காவல்படைக்கு டிச., 30, 31ல் உடல்தகுதி தேர்வு
தமிழ்நாடு சிறப்பு இளைஞர் காவல் படைக்கான உடல் தகுதித் தேர்வு ஜன.,6 ல்
நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, டிச., 30, 31ல் நடத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடக்கம்
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.
"படிக்கும் போது "டிவி" பார்த்தால் நினைவாற்றல் பாதிப்படையும்"
படிக்கும் நேரத்தில், ஓய்விற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் "டிவி" கதை
புத்தகம் வாசிப்பது போன்றவற்றால், படித்த பாடங்கள் நினைவில் நிற்காது
என்று உளவியல் நிபுணர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
குரூப்-2 வினாத்தாள் வழக்கு: குற்றப் பத்திரிகை தாக்கல்
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள் வெளியான வழக்கில், ரிஷிகேஷ்
குண்டு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 242 பக்க குற்றப்பத்திரிகையை,
கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற்றம்: மத்திய அரசு திட்டம்
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம்
நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில உயர்கல்வி கவுன்சில்கள் மூலம்
அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டு வருகிறது. அதே போல
மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும், டாடா சமூக அறிவியல்
நிறுவனமும் இணைந்து, தேசிய உயர்கல்விக்கான மிஷன் (ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா
அபியான்) (ரூசா) என்ற திட்டத்திற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
100 பொறியியல் கல்லூரிகளில் புதிய கற்பிக்கும் நடைமுறை
நாடு முழுவதுமுள்ள 100 பொறியியல் கல்லூரிகள், புதிய பாட அட்டவணைக்கு
மாறவுள்ளன. இதன்படி, பாதியளவு பாடங்கள் ஐ.ஐ.டி பேராசிரியர்களால்
"விர்ச்சுவல்" முறையில் கற்பிக்கப்படவுள்ளன.
படமும், பாடமும்... மாநகராட்சி பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம்
கோவை மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை உள்ளடக்கிய "ஸ்மார்ட்
கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கற்கும்
திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.
குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பு
கோவையில் வேலை தேடி வரும் வெளிமாவட்ட மக்களால், குழந்தை தொழிலாளர்களின்
எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை
பூஜ்ய நிலையை எட்ட முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் அகமதிப்பீடு முறை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
"பிளஸ் 2 பொதுத் தேர்வில் அகமதிப்பீட்டு முறையை, நடப்பு கல்வி ஆண்டு
முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்" என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சங்கரநாராயணன் கூறினார்.
"மாணவ, மாணவியருக்கு கவனச் சிதைவு கூடாது"
"பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் முழு கவனமும், கேள்வி தாளில் இருந்தால்
தான் மூன்று மணி நேரத்திற்குள் தேர்வு எழுதி முடிக்க முடியும். கவனத்தை
சிதற விட வேண்டாம்" என கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும்
ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்னைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல். இது
நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல்
ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்
விதமாக டிச., 9ம் தேதி, சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிகரிக்கும் பட்டதாரிகள் - திணறும் சீனா
சீனாவில் அடுத்தாண்டு கல்லூரிப் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 7.27
மில்லியனாக (70 லட்சத்திற்கும் மேல்) இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெறிமுறை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தேவை: பல்லம் ராஜு
நெறிமுறை சார்ந்த ஒரு முழுமையான வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது
என்பது குறித்து அறிய, மாணவர்களுக்கு உதவ, நமது உயர்கல்வி அமைப்பு அதிக
கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திறந்த புத்தக தேர்வுக்காக கூடுதலாக 30 நிமிடம்
9 மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2014ம் ஆண்டு மார்ச்
மாதம் இறுதி தேர்வுகளில், திறந்த புத்தக தேர்வுக்காக 30 நிமிடங்கள்
கூடுதலாக வழங்க CBSE முடிவு செய்துள்ளது.
60% குறைவான தேர்ச்சி: அரசு பள்ளிகளுக்கு கெடு
"கடந்த பொதுத்தேர்வில், 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி கண்ட 617
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரும் பொதுத்தேர்வில், 80
சதவீதத்திற்கும் அதிகமாக தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும்" என பள்ளி
கல்வித்துறை கெடு விதித்துள்ளது.
தபால் மூலம் நிர்வாக பணியா? கல்வி துறை மீது அலுவலர்கள் கடுப்பு
"தகவல் தொடர்பு வளர்ந்துள்ள இந்த கால கட்டத்திலும், தபால் மூலம்
நிர்வாகப் பணியை செய்யும் முறைக்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும்" என பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம், வலியுறுத்தி
உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமும் இரும்புச்சத்து மாத்திரை
"ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, அரசு பள்ளி
மாணவர்களுக்கு தினமும் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் உள்ளதாக"
சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பணியில் சேர தயக்கம்: மருத்துவர் காலியிடங்கள் அதிகரிப்பு
"ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ரத்தால், அரசு பணியில் சேர டாக்டர்கள்
தயங்குகின்றனர்" என அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் செந்தில் கூறினார்.
பீகாரில் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வி
பீகாரில், ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், 10 ஆயிரம்
ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களுக்காக மீண்டும் ஒரு தேர்வு
நடத்தப்படும். அதிலும், தேர்ச்சி அடையாவிட்டால், பணியில் இருந்து அவர்கள்
"டிஸ்மிஸ்" செய்யப்படுவர் என அம்மாநில கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர்.
பீகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவர்களின் கல்வித்
திறனை மேம்படுத்துவதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஆசிரியர்களின் தகுதியை தெரிந்து கொள்வதற்காக,
சமீபத்தில், மாநிலம் முழுவதும் உள்ள, 43,447 ஆசிரியர்களுக்கு தகுதித்
தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, ஆங்கிலம்,
கணிதம், இந்தி, பொது அறிவு ஆகியவை தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
இதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், தோல்வி அடைந்துள்ளனர்.
இவர்களுக்கு, தங்களின் தகுதித் திறனை அதிகரிக்கும்படி,
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்காக, மீண்டும் ஒரு தேர்வை நடத்தவும்,
முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது முறையும் தோல்வி அடைவோர்,
பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவர். இவ்வாறு, அந்த அதிகாரிகள்
தெரிவித்தனர்.
பொதுத்தேர்வு குறித்து டிசம்பர் 3ல் சென்னையில் ஆலோசனை
"10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி
அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் டிச.,3ல் நடக்கிறது" என அரசு
தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
"படிப்பை தள்ளி வைக்காதீர்; அதுதான் முதல் எதிரி"
"என்னால் முடியும் என மனப்பூர்வமாக நம்புகிறவர்கள் தான், உலகில்
வெற்றியடைந்துள்ளனர். நம்பிக்கை வந்துவிட்டால், உழைப்பு தானாக வரும். "நாளை
படிக்கலாம்" என தள்ளி வைப்பதுதான் முதல் விரோதி. அதை விட்டொழியுங்கள்;
வாழ்வில் எளிதாக ஜெயிக்கலாம்" என பட்டிமன்ற பேச்சாளரும் கல்வியாளருமான,
பாரதி பாஸ்கர் பேசினார்.
மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அரையாண்டு தேர்வுக்குள் வினியோகம்
நாமக்கல் மாவட்டத்தில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள்
வரத் துவங்கியதையடுத்து அடுத்த மாதம் நடக்கவுள்ள அரையாண்டு தேர்வு
முடிவதற்குள் சப்ளை செய்யப்படவுள்ளது.
இணைப்பு பள்ளிகள் சான்றுத்துவம் பெறுவது கட்டாயம் சி.பி.எஸ்.இ
அனைத்துப் பள்ளிகளும் Accreditation பெறுவது கட்டாயம் என்று
அறிவித்துள்ளதுடன், அதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் செயல்பாட்டை
தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளது.
உதவி பேராசிரியர் தேர்வு: பி.எட். கல்லூரி பேராசிரியர்கள் கலக்கம்
தமிழகத்தில் உதவி பேராசிரியர் தேர்வு பணியில் பி.எட்., கல்லூரிகளில்
பணிபுரியும் பேராசிரியர்களின் அனுபவச்சான்று மார்க்கை கணக்கில்
எடுக்காததால் ஆயிரக்கணக்கான பி.எட்., கல்லூரி பேராசிரியர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.
சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள்...நியமனம்! 196 பேருக்கு விரைவில் உத்தரவு வழங்க ஏற்பாடு
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர்
பணியிடங்கள் இன்னும், 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான நேர்முக
தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.
அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை
அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
32 செயற்கைக்கோள்கள்: ரஷ்ய ராக்கெட் சாதனை
செயற்கைக்கோள்களை அனுப்புவதில், ரஷ்யாவும், அமெரிக்காவும் போட்டி
போட்டுக் கொண்டு செயல்படுகின்றன. கடந்த வாரம், அமெரிக்க ராக்கெட் ஒன்று, 29
செயற்கைக்கோள்களை விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்தது.
பள்ளிக்கூடங்கள் உருவாக்குவது இயந்திரங்களையா, மாணவர்களையா?
வாழ்க்கையில் மறக்க முடியாதது பள்ளிப்பருவம். ஒரு மனிதனை மனிதனாக
உருவாக்க அடித்தளமிடக்கூடியதும் பள்ளிப்பருவமே. தான் நினைக்கும் எண்ணங்களை
தன் சக நண்பர்களுடனும், பெற்றோருடனும் அதிகமாகவும் உரிமையோடும்
பகிர்ந்துகொள்வதும் மாணவப்பருவத்திலே தான். மனம் மகிழ்ச்சியான
தருணங்களிலும், விளையாட்டுகளிலும் அதிகமாக ஈடுபடுவதும்
மாணவப்பருவத்திலேதான்.
பள்ளிக்கல்வியின் "நடமாடும் கவுன்சிலிங்" திட்டம் துவக்கம்: பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு
பள்ளிக்கல்வித்துறையின் மூலம் துவங்கிய "நடமாடும் கவுன்சிலிங்"
திட்டத்தில் பாலியல் உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.
மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி
வள்ளலாரின் சன்மார்க்க சங்கம் சார்பில் ஆண்டுதோறும் மாநில
அளவில் கட்டுரை, பேச்சு போட்டிகள், கல்லூரி, மேல்நிலை பள்ளிகள் அளவில்
நடத்தப்படுகிறது.
ஜெயித்து காட்டுவோம் நிகழ்ச்சி: பல்லாயிரக்கணக்கான மாணவர் குவிந்தனர்
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடந்துவந்த "தினமலர்" நாளிதழின்
"ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சி சென்னை நகரில் நேற்று துவங்கியது. சென்னை
பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலை அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று
பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர் குவிந்தனர்.
பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்
மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக
விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை
சேர்க்கப்பட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)