10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தூத்துக்குடி மாவட்டம், 95.42 சதவீதம்
தேர்ச்சி பெற்று, மாநிலத்தில், 2வது இடத்தை, தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில், இத்தேர்வை,
மொத்தம்,24,450 மாணவ, மாணவியர் எழுதினர். இவர்களில், 23,330 பேர், தேர்ச்சி
பெற்றுள்ளனர். இது, 95.42 சதவீத தேர்ச்சியாகும். இதன்மூலம், மாநில அளவில்,
தேர்ச்சி சதவீதத்தில், கன்னியாகுமரிக்கு அடுத்து, தூத்துக்குடி,
இரண்டாமிடத்தில் உள்ளது.
கடந்தாண்டு, 93.68 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில், இரண்டாமிடம்
பிடித்தது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி,
செயக்கண்ணு தெரிவித்தார்.
No comments:
Post a Comment